முகப்பு | தொடக்கம் |
காவற் பெண்டு |
86 |
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன் |
|
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன் |
|
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும் |
|
புலி சேர்ந்து போகிய கல் அளை போல, |
|
5 |
ஈன்ற வயிறோ இதுவே; |
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! |
|
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
| |
காவற்பெண்டின் பாட்டு.
|