முகப்பு | தொடக்கம் |
காவிரிப் பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் |
57 |
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், |
|
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, |
|
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! |
|
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின், |
|
5 |
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு |
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க; |
|
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க; |
|
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் |
|
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் |
|
10 |
கடிமரம் தடிதல் ஓம்பு நின் |
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே. |
|
திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
58 |
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே, |
|
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக் |
|
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு, |
|
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது, |
|
5 |
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ, |
இளையது ஆயினும் கிளை அரா எறியும் |
|
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச் |
|
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே, |
|
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, |
|
10 |
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என, |
வரைய சாந்தமும், திரைய முத்தமும், |
|
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் |
|
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே; |
|
பால் நிற உருவின் பனைக் கொடியோனும், |
|
15 |
நீல் நிற உருவின் நேமியோனும், என்று |
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, |
|
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, |
|
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ? |
|
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே; |
|
20 |
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் |
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப் |
|
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம் |
|
கையகப்படுவது பொய் ஆகாதே; |
|
அதனால், நல்ல போலவும், நயவ போலவும், |
|
25 |
தொல்லோர் சென்ற நெறிய போலவும், |
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் |
|
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது, |
|
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று |
|
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக் |
|
30 |
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி |
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த |
|
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே. |
|
திணை பாடாண் திணை; துறை உடனிலை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
169 |
நும் படை செல்லும்காலை, அவர் படை |
|
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ, |
|
அவர் படை வரூஉம்காலை, நும் படைக் |
|
கூழை தாங்கிய, அகல் யாற்றுக் |
|
5 |
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, |
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்; |
|
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை; |
|
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல் |
|
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார், |
|
10 |
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் |
பெரு மரக் கம்பம் போல, |
|
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
171 |
இன்று செலினும் தருமே; சிறு வரை |
|
நின்று செலினும் தருமே; பின்னும், |
|
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி |
|
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, |
|
5 |
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; |
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப |
|
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்; |
|
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும், |
|
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும், |
|
10 |
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை |
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே. |
|
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி |
|
முள்ளும் நோவ உறாற்கதில்ல! |
|
ஈவோர் அரிய இவ் உலகத்து, |
|
15 |
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
|
353 |
ஆசு இல் கம்மியன் மாசு அறப் புனைந்த |
|
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல், |
|
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ, |
|
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி, |
|
5 |
தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை, |
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்! |
|
'யார் மகள்?' என்போய்; கூறக் கேள், இனி: |
|
குன்று கண்டன்ன நிலைப் பல் போர்பு |
|
நாள் கடா அழித்த நனந் தலைக் குப்பை |
|
10 |
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றாத் |
தொல் குடி மன்னன் மகளே; முன்நாள் |
|
கூறி வந்த மா முது வேந்தர்க்கு |
|
............................................. |
|
............................................. உழக்கிக் குருதி ஓட்டி, |
|
15 |
கதுவாய் போகிய துதி வாய் எஃகமொடு, |
பஞ்சியும் களையாப் புண்ணர், |
|
அஞ்சுதகவு உடையர், இவள் தன்னைமாரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|