முகப்பு | தொடக்கம் |
கோடை பாடிய பெரும்பூதனார் |
259 |
ஏறுடைப் பெரு நிரை பெயர்தர, பெயராது, |
|
இலை புதை பெருங் காட்டுத் தலை கரந்து இருந்த |
|
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்; |
|
செல்லல், செல்லல்; சிறக்க, நின் உள்ளம், |
|
5 |
முருகு மெய்ப் பட்ட புலைத்தி போலத் |
தாவுபு தெறிக்கும் ஆன்மேல் |
|
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே! |
|
திணை கரந்தை; துறை செரு மலைதல்; பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம்.
| |
.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.
|