கோடை பாடிய பெரும்பூதனார்

259
ஏறுடைப் பெரு நிரை பெயர்தர, பெயராது,
இலை புதை பெருங் காட்டுத் தலை கரந்து இருந்த
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல், செல்லல்; சிறக்க, நின் உள்ளம்,
5
முருகு மெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே!

திணை கரந்தை; துறை செரு மலைதல்; பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம்.
.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.