முகப்பு | தொடக்கம் |
கோவூர் கிழார் |
31 |
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் |
|
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, |
|
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, |
|
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க, |
|
5 |
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் |
பாசறை அல்லது நீ ஒல்லாயே; |
|
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் |
|
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே; |
|
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர், |
|
10 |
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; |
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென் |
|
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து, |
|
குண கடல் பின்னது ஆக, குட கடல் |
|
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, |
|
15 |
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து, |
நெஞ்சு நடுங்கு அவலம் பாய, |
|
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. |
|
திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
32 |
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் |
|
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? |
|
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள், |
|
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என, |
|
5 |
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் |
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! |
|
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி |
|
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த |
|
பசு மண் குரூஉத் திரள் போல, அவன் |
|
10 |
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. |
திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
33 |
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் |
|
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் |
|
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, |
|
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் |
|
5 |
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் |
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் |
|
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், |
|
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் |
|
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; |
|
10 |
பாடுநர் வஞ்சி பாட, படையோர் |
தாது எரு மறுகின் பாசறை பொலிய, |
|
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த |
|
மலரா மாலைப் பந்து கண்டன்ன |
|
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் |
|
15 |
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை |
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற |
|
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, |
|
காம இருவர் அல்லது, யாமத்துத் |
|
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், |
|
20 |
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி |
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, |
|
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
41 |
காலனும் காலம் பார்க்கும்; பாராது, |
|
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய, |
|
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே! |
|
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும், |
|
5 |
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும், |
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும், |
|
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும், |
|
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், |
|
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், |
|
10 |
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும், |
கனவின் அரியன காணா, நனவில் |
|
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி, |
|
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர், |
|
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு |
|
15 |
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு |
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு |
|
எரி நிகழ்ந்தன்ன செலவின் |
|
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
44 |
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, |
|
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, |
|
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, |
|
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, |
|
5 |
அலமரல் யானை உரும் என முழங்கவும், |
பால் இல் குழவி அலறவும், மகளிர் |
|
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல் |
|
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும், |
|
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; |
|
10 |
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! |
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்; |
|
மறவை ஆயின், போரொடு திறத்தல்; |
|
அறவையும் மறவையும் அல்லையாக, |
|
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் |
|
15 |
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் |
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
45 |
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; |
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; |
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு |
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; |
|
5 |
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், |
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் |
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு |
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
|
46 |
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் |
|
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, |
|
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, |
|
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; |
|
5 |
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த |
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, |
|
விருந்தின் புன்கண் நோவுடையர்; |
|
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
|
47 |
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, |
|
'நெடிய' என்னாது சுரம் பல கடந்து |
|
வடியா நாவின் வல்லாங்குப் பாடி, |
|
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி, |
|
5 |
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, |
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை |
|
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட |
|
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, |
|
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் |
|
10 |
மண் ஆள் செல்வம் எய்திய |
நும் ஓரன்ன செம்மலும் உடைத்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நளங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, 'ஒற்று வந்தான்' என்று கொல்லப் புக்குழி, கோவூர் கிழார் பாடி, உய்யக்கொண்டது.
|
68 |
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் |
|
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது, |
|
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, |
|
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து, |
|
5 |
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து |
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் |
|
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை, |
|
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் |
|
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் |
|
10 |
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன், |
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு |
|
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என, |
|
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப, |
|
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி, |
|
15 |
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த |
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை |
|
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் |
|
உறந்தையோனே குருசில்; |
|
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
70 |
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண! |
|
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன | |
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை |
|
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி; |
|
5 |
வினவல் ஆனா முது வாய் இரவல! |
தைஇத் திங்கள் தண் கயம் போல, |
|
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர், |
|
அடுதீ அல்லது சுடுதீ அறியாது; |
|
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன், |
|
10 |
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி, |
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை |
|
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் |
|
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் |
|
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல், |
|
15 |
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச் |
செல்வைஆயின், செல்வை ஆகுவை; |
|
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் |
|
தலைப்பாடு அன்று, அவன் ஈகை; |
|
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
308 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின், |
|
மின் நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ் |
|
நன்மை நிறைந்த நய வரு பாண! |
|
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் |
|
5 |
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே; |
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை |
|
சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே; |
|
உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல் |
|
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன் |
|
10 |
புன் தலை மடப் பிடி நாண, |
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே. |
|
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
கோவூர் கிழார் பாடியது.
|
373 |
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப, |
|
செரு நவில் வேழம் கொண்மூ ஆக, |
|
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் |
|
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, |
|
5 |
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் |
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, |
|
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, |
|
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே! |
|
.............................................தண்ட மாப் பொறி. |
|
10 |
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, |
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, |
|
மென் தோள் மகளிர் மன்றம் பேணார், |
|
புண்ணுவ |
|
..........................அணியப் புரவி வாழ்க என, |
|
15 |
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, |
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் |
|
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா, |
|
............................................ற் றொக்கான |
|
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, |
|
20 |
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு, |
உரும் எறி மலையின், இரு நிலம் சேர, |
|
சென்றோன் மன்ற, சொ |
|
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, |
|
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, |
|
25 |
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் |
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; |
|
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்! |
|
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, |
|
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி, |
|
30 |
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும் |
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, |
|
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி, |
|
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், |
|
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! |
|
35 |
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் |
தா இன்று உதவும் பண்பின், பேயொடு |
|
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து |
|
செஞ் செவி எருவை குழீஇ, |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
40 |
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
| |
கிழார் பாடியது.
|
382 |
கடல்படை அடல் கொண்டி, |
|
மண்டுற்ற மலிர் நோன் தாள், |
|
தண் சோழ நாட்டுப் பொருநன், |
|
அலங்கு உளை அணி இவுளி |
|
5 |
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; |
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்; |
|
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என; |
|
நெய் குய்ய ஊன் நவின்ற |
|
பல் சோற்றான், இன் சுவைய |
|
10 |
நல்குரவின் பசித் துன்பின் நின் |
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும், |
|
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி, |
|
கண் கேள்வி, கவை நாவின், |
|
நிறன் உற்ற, அராஅப் போலும் |
|
15 |
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப, |
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்! |
|
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய; |
|
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை |
|
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் |
|
20 |
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர் |
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், |
|
வென்ற தேர், பிறர் வேத்தவையானே. |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
386 |
நெடு நீர நிறை கயத்துப் |
|
படு மாரித் துளி போல, |
|
நெய் துள்ளிய வறை முகக்கவும், |
|
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், |
|
5 |
ஊன் கொண்ட வெண் மண்டை |
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், |
|
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, |
|
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை |
|
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக; |
|
10 |
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் |
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின; |
|
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான், |
|
வில் இருந்த வெங் குறும்பின்று; |
|
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் |
|
15 |
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; |
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து; |
|
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே; |
|
பொராஅப் பொருநரேம்; |
|
20 |
குண திசை நின்று குடமுதல் செலினும், |
குட திசை நின்று குணமுதல் செலினும், |
|
வட திசை நின்று தென்வயின் செலினும், |
|
தென் திசை நின்று குறுகாது நீடினும், |
|
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் |
|
25 |
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
400 |
மாக விசும்பின் வெண் திங்கள் |
|
மூ ஐந்தான் முறை முற்ற, |
|
கடல் நடுவண் கண்டன்ன என் |
|
இயம் இசையா, மரபு ஏத்தி, |
|
5 |
கடைத் தோன்றிய கடைக் கங்குலான் |
பலர் துஞ்சவும் தான் துஞ்சான், |
|
உலகு காக்கும் உயர் ெ..........க் |
|
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே; |
|
கேட்டதற்கொண்டும், வேட்கை தண்டாது, |
|
10 |
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி, |
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு....... |
|
............................................லவான |
|
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி, |
|
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து; |
|
15 |
போது அறியேன், பதிப் பழகவும், |
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் |
|
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ; |
|
மறவர் மலிந்த த............................................. |
|
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து, |
|
20 |
இருங் கழி இழிதரு........ கலி வங்கம் |
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து, |
|
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர், |
|
உறைவு இன் யாணர்,........ கிழவோனே! |
|
திணை அது; துறை இயன்மொழி. |
|