முகப்பு | தொடக்கம் |
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனா |
54 |
எம் கோன் இருந்த கம்பலை மூதூர், |
|
உடையோர் போல இடையின்று குறுகி, |
|
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல் |
|
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; |
|
5 |
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து, |
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு |
|
ஆனாது ஈயும் கவி கை வண்மைக் |
|
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த |
|
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை, |
|
10 |
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி, |
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன் |
|
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப் |
|
புலி துஞ்சு வியன் புலத்தற்றே |
|
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.
|
61 |
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் |
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், |
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட |
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் |
|
5 |
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, |
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, |
|
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் |
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் |
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் |
|
10 |
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து |
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், |
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், |
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, |
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், |
|
15 |
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் |
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் |
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, |
|
திருந்து அடி பொருந்த வல்லோர் |
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
167 |
நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர் |
|
படை விலக்கி எதிர் நிற்றலின், |
|
வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு, |
|
கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே: |
|
5 |
அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின், |
ஊறு அறியா மெய் யாக்கையொடு, |
|
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே: |
|
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்; |
|
ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க் |
|
10 |
கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி! |
நின்னை வியக்கும் இவ் உலகம்; அஃது |
|
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே. |
|
திணை அது; துறை அரச வாகை.
| |
ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
180 |
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; |
|
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே; |
|
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து |
|
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து, |
|
5 |
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி, |
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து, |
|
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்; |
|
இன்மை தீர வேண்டின், எம்மொடு |
|
நீயும் வம்மோ? முது வாய் இரவல! |
|
10 |
யாம் தன் இரக்கும்காலை, தான் எம் |
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க் |
|
கருங் கைக் கொல்லனை இரக்கும், |
|
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே. |
|
திணையும் துறையும் அவை; துறை பாணாற்றுப் படையும் ஆம்.
| |
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
197 |
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு |
|
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ, |
|
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு |
|
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, |
|
5 |
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு |
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ, |
|
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர் |
|
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே; |
|
எம்மால் வியக்கப்படூஉமோரே, |
|
10 |
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த |
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு, |
|
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம், |
|
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின் |
|
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே; |
|
15 |
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் |
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; |
|
நல் அறிவு உடையோர் நல்குரவு |
|
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
394 |
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின், |
|
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன், |
|
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன், |
|
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும், |
|
5 |
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்! |
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை, |
|
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை |
|
வாடா வஞ்சி பாடினேனாக, |
|
10 |
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி, |
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின் |
|
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி |
|
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது |
|
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர் |
|
15 |
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு, |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும், |
|
'துன் அரும் பரிசில் தரும்' என, |
|
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே. |
|
திணையும் துறையும் அவை. |
|
கடைநிலை ஆயின எல்லாம் பாடாண் திணை.
| |
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|