முகப்பு | தொடக்கம் |
சாத்தந்தையார் |
80 |
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், |
|
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, |
|
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் |
|
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே |
|
5 |
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் |
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம |
|
பசித்துப் பணை முயலும் யானை போல, |
|
இரு தலை ஒசிய எற்றி, |
|
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. |
|
திணை தும்பை; துறை எருமை மறம்.
| |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
|
81 |
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே |
|
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே; |
|
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச் |
|
செறியத் தொடுத்த கண்ணிக் |
|
5 |
கவி கை மள்ளன் கைப்பட்டோரே? |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
82 |
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென, |
|
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று, |
|
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது |
|
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ |
|
5 |
ஊர் கொள வந்த பொருநனொடு, |
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
287 |
துடி எறியும் புலைய! |
|
எறி கோல் கொள்ளும் இழிசின! |
|
காலம் மாரியின் அம்பு தைப்பினும், |
|
வயல் கெண்டையின் வேல் பிறழினும், |
|
5 |
பொலம் புனை ஓடை அண்ணல் யானை |
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும், |
|
ஓடல் செல்லாப் பீடுடையாளர் |
|
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை |
|
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும், |
|
10 |
தண்ணடை பெறுதல் யாவது? படினே, |
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும், |
|
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால் |
|
வம்ப வேந்தன் தானை |
|
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே! |
|
திணை கரந்தை; துறை நீண்மொழி.
| |
சாத்தந்தையார் பாடியது.
|