முகப்பு | தொடக்கம் |
சேரமான் கணைக்கால் இரும்பொறை |
74 |
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், |
|
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்; |
|
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய |
|
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம், |
|
5 |
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய, |
தாம் இரந்து உண்ணும் அளவை |
|
ஈன்மரோ, இவ் உலகத்தானே? |
|
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி. |
|
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து
| |
உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.
|