முகப்பு | தொடக்கம் |
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் |
181 |
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில், |
|
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு, |
|
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும் |
|
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை, |
|
5 |
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை, |
வலாஅரோனே, வாய் வாள் பண்ணன்; |
|
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின், |
|
இன்னே சென்மதி, நீயே சென்று, அவன் |
|
பகைப் புலம் படராஅளவை, நின் |
|
10 |
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. |
திணையும் துறையும் அவை.
| |
வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.
|
265 |
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, |
|
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் |
|
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, |
|
பல் ஆன் கோவலர் படலை சூட்ட, |
|
5 |
கல் ஆயினையே கடு மான் தோன்றல்! |
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் |
|
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் |
|
கடும் பகட்டு யானை வேந்தர் |
|
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
|