முகப்பு | தொடக்கம் |
சோழன் நலங்கிள்ளி |
73 |
மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி, |
|
'ஈ' என இரக்குவர் ஆயின், சீருடை |
|
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்; |
|
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து; |
|
5 |
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் |
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் |
|
துஞ்சு புலி இடறிய சிதடன் போல, |
|
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் |
|
கழை தின் யானைக் கால் அகப்பட்ட |
|
10 |
வன் திணி நீள் முளை போல, சென்று, அவண் |
வருந்தப் பொரேஎன்ஆயின், பொருந்திய |
|
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் |
|
பல் இருங் கூந்தல் மகளிர் |
|
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
|
75 |
'மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென, |
|
பால் தர வந்த பழ விறல் தாயம் |
|
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு' எனக் |
|
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச் |
|
5 |
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே; |
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் |
|
விழுமியோன் பெறுகுவனாயின், தாழ் நீர் |
|
அறு கயமருங்கின் சிறு கோல் வெண் கிடை |
|
என்றூழ் வாடு வறல் போல, நன்றும் |
|
10 |
நொய்தால் அம்ம தானே மை அற்று, |
விசும்புற ஓங்கிய வெண் குடை, |
|
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே. |
|
திணை அது; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
|