முகப்பு | தொடக்கம் |
நரிவெரூஉத்தலையார் |
5 |
எருமை அன்ன கருங் கல் இடை தோறு, |
|
ஆனின் பரக்கும் யானைய, முன்பின், |
|
கானக நாடனை! நீயோ, பெரும! |
|
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: |
|
5 |
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா |
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல், |
|
குழவி கொள்பவரின், ஓம்புமதி! |
|
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே. |
|
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
| |
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
|
195 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள், |
|
பயன் இல் மூப்பின், பல் சான்றீரே! |
|
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன் |
|
5 |
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; |
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், |
|
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் |
|
எல்லாரும் உவப்பது; அன்றியும், |
|
நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே. |
|
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
| |
நரிவெரூஉத்தலையார் பாடியது.
|