முகப்பு | தொடக்கம் |
நல்லிறையனார் |
393 |
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் |
|
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின், |
|
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி, |
|
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் |
|
5 |
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின், |
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என, |
|
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா, |
|
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென, |
|
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் |
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப, |
|
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த |
|
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன, |
|
வெண் நிண மூரி அருள, நாள் உற |
|
15 |
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என் |
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி, |
|
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன, |
|
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும், |
|
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல் |
|
20 |
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி, |
|
'கோடை ஆயினும், கோடி............................... |
|
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந! |
|
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப் |
|
25 |
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே. |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.
|