முகப்பு | தொடக்கம் |
நன்னாகனார் |
381 |
ஊனும் ஊணும் முனையின், இனிது என, |
|
பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும், |
|
அளவுபு கலந்து, மெல்லிது பருகி, |
|
விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக, |
|
5 |
'சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?' என, |
யாம் தன் அறியுநமாக, தான் பெரிது |
|
அன்பு உடைமையின், எம் பிரிவு அஞ்சி, |
|
துணரியது கொளாஅவாகி, பழம் ஊழ்த்து, |
|
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ், |
|
10 |
பெயல் பெய்தன்ன, செல்வத்து ஆங்கண், |
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி, |
|
சிதாஅர் வள்பின் சிதர்ப் புறத் தடாரி |
|
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி, |
|
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின், |
|
15 |
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு |
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால், |
|
இரு நிலம் கூலம் பாற, கோடை |
|
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை, |
|
சேயைஆயினும், இவணைஆயினும், |
|
20 |
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! |
சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை, |
|
ஒலி வெள் அருவி வேங்கட நாடன், |
|
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் |
|
அறத்துறை அம்பியின் மான, மறப்பு இன்று, |
|
25 |
இருங் கோள் ஈராப் பூட்கை, |
கரும்பனூரன் காதல் மகனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.
|