முகப்பு | தொடக்கம் |
நெடுங்கழுத்துப் பரணர் |
291 |
சிறாஅஅர்! துடியர்! பாடு வல் மகாஅஅர்! |
|
தூ வெள் அறுவை மாயோற் குறுகி, |
|
இரும் புள் பூசல் ஓம்புமின்; யானும், |
|
விளரிக் கொட்பின், வெள் நரி கடிகுவென்; |
|
5 |
என் போல் பெரு விதுப்புறுக, வேந்தே |
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன் தலை |
|
மணி மருள் மாலை சூட்டி, அவன் தலை |
|
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே! |
|
திணை அது; துறை வேத்தியல்.
| |
நெடுங்கழுத்துப் பரணர் பாடியது.
|