முகப்பு | தொடக்கம் |
நெடும் பல்லியத்தனார் |
64 |
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி, |
|
செல்லாமோதில் சில் வளை விறலி! |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப, |
|
5 |
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின் |
குடுமிக் கோமாற் கண்டு, |
|
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே? |
|
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
| |
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.
|