முகப்பு | தொடக்கம் |
பாரதம் பாடிய பெருந்தேவனார் |
1 |
கண்ணி கார் நறுங் கொன்றை; காமர் |
|
வண்ண மார்பின் தாரும் கொன்றை: |
|
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த |
|
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப: |
|
5 |
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை |
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே: |
|
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத் |
|
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்: |
|
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை |
|
10 |
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே |
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய, |
|
நீர் அறவு அறியாக் கரகத்து, |
|
தாழ் சடைப் பொலிந்த, அருந் தவத்தோற்கே. |
|
கடவுள் வாழ்த்து.
| |
பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது.
|