முகப்பு | தொடக்கம் |
பிசிராந்தையார் |
67 |
அன்னச் சேவல்! அன்னச் சேவல்! |
|
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் |
|
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, |
|
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் |
|
5 |
மையல் மாலை, யாம் கையறுபு இனைய, |
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, |
|
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது |
|
சோழ நல் நாட்டுப் படினே, கோழி |
|
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, |
|
10 |
வாயில் விடாது கோயில் புக்கு, எம் |
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் |
|
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் |
|
இன்புறு பேடை அணிய, தன் |
|
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|
184 |
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, |
|
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; |
|
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, |
|
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; |
|
5 |
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, |
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்; |
|
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் |
|
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, |
|
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், |
|
10 |
யானை புக்க புலம் போல, |
தானும் உண்ணான், உலகமும் கெடுமே. |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.
|
191 |
'யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் |
|
யாங்கு ஆகியர்?' என வினவுதிர் ஆயின், |
|
மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்; |
|
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும் |
|
5 |
அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை |
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் |
|
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரை,'கேட்கும் காலம் பலவாலோ? நரை நுமக்கு இல்லையாலோ?' என்ற சான்றோர்க்கு அவர் சொற்றது.
|
212 |
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக் |
|
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள் |
|
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா, |
|
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ, |
|
5 |
வைகு தொழில் மடியும் மடியா விழவின் |
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர் |
|
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி, |
|
கோழியோனே, கோப்பெருஞ்சோழன் |
|
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ, |
|
10 |
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|