முகப்பு | தொடக்கம் |
புறத்திணை நன்னாகனார் |
176 |
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் |
|
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின், |
|
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் |
|
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம், |
|
5 |
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின், |
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ் |
|
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை |
|
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே! |
|
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர் |
|
10 |
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல, |
காணாது கழிந்த வைகல், காணா |
|
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன் |
|
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
376 |
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் |
|
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி |
|
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச் |
|
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ, |
|
5 |
பாணர் ஆரும்அளவை, யான் தன் |
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்; |
|
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென, |
|
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற, |
|
பண்டு அறிவாரா உருவோடு, என் அரைத் |
|
10 |
தொன்று படு துளையொடு பரு இழை போகி, |
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி, |
|
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை |
|
நின்ற முரற்கை நீக்கி, நன்றும் |
|
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு, |
|
15 |
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே, |
இரவினானே, ஈத்தோன் எந்தை; |
|
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும், |
|
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்; |
|
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்; |
|
20 |
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி, |
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை, |
|
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி, |
|
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
379 |
யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை; |
|
அவனே பெறுக, என் நா இசை நுவறல்; |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின், |
|
பின்னை மறத்தோடு அரிய, கல் செத்து, |
|
5 |
அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் |
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் |
|
வில்லியாதன் கிணையேம்; பெரும! |
|
'குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர் |
|
நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா, |
|
10 |
வல்லன், எந்தை, பசி தீர்த்தல்' என, |
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற, |
|
கேட்டதற்கொண்டும் வேட்கை தண்டாது, |
|
விண் தோய் தலைய குன்றம் பின்பட, |
|
......................................ர வந்தனென், யானே |
|
15 |
தாய் இல் தூவாக் குழவி போல, ஆங்கு அத் |
திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை |
|
வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் |
|
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
384 |
மென்பாலான் உடன் அணைஇ, |
|
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை |
|
அறைக் கரும்பின் பூ அருந்தும்; |
|
வன்பாலான் கருங் கால் வரகின் |
|
5 |
............................................ |
அம் கண் குறு முயல வெருவ, அயல |
|
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து; |
|
விழவு இன்றாயினும், உழவர் மண்டை |
|
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து; |
|
10 |
.............................................கிணையேம், பெரும! |
நெல் என்னா, பொன் என்னா, |
|
கனற்றக் கொண்ட நறவு என்னா, |
|
.....................மனை என்னா, அவை பலவும் |
|
யான் தண்டவும், தான் தண்டான், |
|
15 |
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, |
மண் நாணப் புகழ் வேட்டு, |
|
நீர் நாண நெய் வழங்கி, |
|
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை..... |
|
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு |
|
20 |
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட |
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும், |
|
தின்ற நண் பல் ஊன் தோண்டவும், |
|
வந்த வைகல் அல்லது, |
|
சென்ற எல்லைச் செலவு அறியேனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|