பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார்

83
அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே;
என் போல் பெரு விதுப்புறுக என்றும்
5
ஒரு பாற் படாஅதாகி,
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே!

திணை கைக்கிளை; துறை பழிச்சுதல்.
அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.

 
84
என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே;
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என்னை போர்க் களம் புகினே,
கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண்,
5
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன்னன்னே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

 
85
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்,
என்னைக்கு நாடு இஃது அன்மையானும்,
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே;
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே;
5
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே;
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.