முகப்பு | தொடக்கம் |
பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார் |
83 |
அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என் |
|
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே; |
|
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே; |
|
என் போல் பெரு விதுப்புறுக என்றும் |
|
5 |
ஒரு பாற் படாஅதாகி, |
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே! |
|
திணை கைக்கிளை; துறை பழிச்சுதல்.
| |
அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.
|
84 |
என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே; |
|
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே; |
|
போர் எதிர்ந்து என்னை போர்க் களம் புகினே, |
|
கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண், |
|
5 |
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு |
உமணர் வெரூஉம் துறையன்னன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
85 |
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும், |
|
என்னைக்கு நாடு இஃது அன்மையானும், |
|
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே; |
|
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே; |
|
5 |
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே; |
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல், |
|
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று, |
|
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|