முகப்பு | தொடக்கம் |
பெருஞ்சித்திரனார் |
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு |
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
| |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
159 |
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின், |
|
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து, |
|
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி, |
|
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று, |
|
5 |
முன்றில் போகா முதிர்வினள் யாயும்; |
பசந்த மேனியொடு படர் அட வருந்தி, |
|
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் |
|
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து, |
|
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த |
|
10 |
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று, |
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று, |
|
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து, |
|
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா, |
|
துவ்வாளாகிய என் வெய்யோளும்; |
|
15 |
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் |
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை, |
|
ஐவனம் வித்தி, மையுறக் கவினி, |
|
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக் |
|
கருவி வானம் தலைஇ யாங்கும், |
|
20 |
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என், |
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப |
|
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும், |
|
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ |
|
இன்புற விடுதிஆயின், சிறிது |
|
25 |
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண! |
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் |
|
வசை இல் விழுத் திணைப் பிறந்த |
|
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே. |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
160 |
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த |
|
முளி புல் கானம் குழைப்ப, கல்லென |
|
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு, |
|
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை |
|
5 |
அவிழ் புகுவு அறியாதுஆகலின், வாடிய |
நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென, |
|
குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில், |
|
மதி சேர் நாள்மீன் போல, நவின்ற |
|
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ, |
|
10 |
"கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என, |
அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி, |
|
நட்டோர் நட்ட நல் இசைக் குமணன், |
|
மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே; |
|
செல்குவைஆயின், நல்குவன், பெரிது' என, |
|
15 |
பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து, |
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று, |
|
இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண் |
|
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன், |
|
20 |
கூழும் சோறும் கடைஇ, ஊழின் |
உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு, |
|
மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும், |
|
நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி, |
|
பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும் |
|
25 |
வினவல் ஆனாளாகி, நனவின் |
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப, |
|
செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே |
|
விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை |
|
நீர் சூழ் நிலவரை உயர, நின் |
|
30 |
சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
161 |
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு, |
|
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ, |
|
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு, |
|
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து, |
|
5 |
வள மழை மாறிய என்றூழ்க் காலை, |
மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக் |
|
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு, |
|
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின், |
|
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர, |
|
10 |
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று, |
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு, |
|
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக் |
|
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து, |
|
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின் |
|
15 |
தாள் படு செல்வம் காண்தொறும் மருள, |
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய |
|
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, |
|
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில் |
|
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, |
|
20 |
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்! |
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி! |
|
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே, |
|
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த |
|
25 |
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் |
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப் |
|
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் |
|
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல, |
|
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின் |
|
30 |
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப, |
வாள் அமர் உழந்த நின் தானையும், |
|
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.
|
162 |
இரவலர் புரவலை நீயும் அல்லை; |
|
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; |
|
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு |
|
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க் |
|
5 |
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த |
நெடு நல் யானை எம் பரிசில்; |
|
கடுமான் தோன்றல்! செல்வல் யானே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,
|
163 |
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும், |
|
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும், |
|
கடும்பின் கடும் பசி தீர யாழ நின் |
|
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும், |
|
5 |
இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது, |
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் |
|
எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே! |
|
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன் |
|
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே. |
|
திணை அது; துறை பரிசில்
| |
பெருஞ் சித்திரனார் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது.
|
207 |
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, |
|
பருகு அன்ன வேட்கை இல்வழி, |
|
அருகில் கண்டும் அறியார் போல, |
|
அகம் நக வாரா முகன் அழி பரிசில் |
|
5 |
தாள் இலாளர் வேளார் அல்லர்? |
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே |
|
பெரிதே உலகம்; பேணுநர் பலரே; |
|
மீளி முன்பின் ஆளி போல, |
|
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென |
|
10 |
நோவாதோன்வயின் திரங்கி, |
வாயா வன் கனிக்கு உலமருவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானை, 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
208 |
'குன்றும் மலையும் பல பின் ஒழிய, |
|
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என |
|
நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு, |
|
ஈங்கனம் செல்க, தான்' என, என்னை |
|
5 |
யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்? |
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர் |
|
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி, |
|
தினை அனைத்துஆயினும், இனிது அவர் |
|
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது,'இது கொண்டு செல்க!' என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது, அவர் சொல்லியது.
|
237 |
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, |
|
பாடி நின்ற பசி நாட்கண்ணே, |
|
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, |
|
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் |
|
5 |
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என |
நச்சி இருந்த நசை பழுதாக, |
|
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, |
|
'அளியர்தாமே ஆர்க' என்னா |
|
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, |
|
10 |
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் |
வாழைப் பூவின் வளை முறி சிதற, |
|
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: |
|
15 |
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் |
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், |
|
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் |
|
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, |
|
நனியுடைப் பரிசில் தருகம், |
|
20 |
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
238 |
கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த |
|
செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா, |
|
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி, |
|
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் |
|
5 |
காடு முன்னினனே, கள் காமுறுநன்; |
தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி, |
|
பாடுநர் கடும்பும் பையென்றனவே; |
|
தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே; |
|
ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே; |
|
10 |
வெந் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப, |
எந்தை ஆகுல அதற் படல் அறியேன்; |
|
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற |
|
என் ஆகுவர்கொல், என் துன்னியோரே? |
|
மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின், |
|
15 |
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக் |
கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு, |
|
வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து, |
|
அவல மறு சுழி மறுகலின், |
|
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.
|