முகப்பு | தொடக்கம் |
பெருந் தலைச் சாத்தனார் |
151 |
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, |
|
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து, |
|
புன் தலை மடப் பிடி பரிசிலாக, |
|
5 |
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க் |
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும் |
|
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர் |
|
நன்னன் மருகன் அன்றியும், நீயும் |
|
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப் |
|
10 |
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை |
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் |
|
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.
|
164 |
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் |
|
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா, |
|
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி, |
|
இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை |
|
5 |
சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி, |
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என் |
|
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ, |
|
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண! |
|
என் நிலை அறிந்தனைஆயின், இந் நிலைத் |
|
10 |
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய |
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ், |
|
மண் அமை முழவின், வயிரியர் |
|
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே. |
|
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
165 |
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் |
|
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே; |
|
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர், |
|
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், |
|
5 |
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; |
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல், |
|
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக் |
|
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப் |
|
பாடி நின்றனெனாக, 'கொன்னே |
|
10 |
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என |
நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என, |
|
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய, |
|
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்; |
|
ஆடு மலி உவகையொடு வருவல், |
|
15 |
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே. |
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
205 |
முற்றிய திருவின் மூவர் ஆயினும், |
|
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே; |
|
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி |
|
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர் |
|
5 |
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, |
வெள் வீ வேலிக் கோடைப் பொருந! |
|
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய |
|
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய், |
|
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக! |
|
10 |
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து, |
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ |
|
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு |
|
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் |
|
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
209 |
பொய்கை நாரை போர்வில் சேக்கும் |
|
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர் |
|
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல் |
|
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல் |
|
5 |
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும் |
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, |
|
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி, |
|
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று, |
|
10 |
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் |
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென் |
|
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந! |
|
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்; |
|
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள் |
|
15 |
குறு நணி காண்குவதாக நாளும், |
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி, |
|
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும் |
|
பெரு வரை அன்ன மார்பின், |
|
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
294 |
'வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர, |
|
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை, |
|
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர் |
|
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து, |
|
5 |
இறையும் பெயரும் தோற்றி, நுமருள் |
நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு' என, |
|
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும் |
|
அரவு உமிழ் மணியின் குறுகார் |
|
நிரை தார் மார்பின் நின் கேள்வனை, பிறரே. |
|
திணை தும்பை; துறை தானைமறம்.
| |
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|