முகப்பு | தொடக்கம் |
பேரெயின் முறுவலார் |
239 |
தொடியுடைய தோள் மணந்தனன்; |
|
கடி காவில் பூச் சூடினன்; |
|
தண் கமழும் சாந்து நீவினன்; |
|
செற்றோரை வழி தபுத்தனன்; |
|
5 |
நட்டோரை உயர்பு கூறினன்; |
'வலியர்' என, வழிமொழியலன்; |
|
'மெலியர்' என, மீக்கூறலன்; |
|
பிறரைத் தான் இரப்பு அறியலன்; |
|
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்; |
|
10 |
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்; |
வருபடை எதிர் தாங்கினன்; |
|
பெயர்படை புறங்கண்டனன்; |
|
கடும் பரிய மாக் கடவினன்; |
|
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்; |
|
15 |
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்; |
தீம் செறி தசும்பு தொலைச்சினன்; |
|
பாண் உவப்ப பசி தீர்த்தனன்; |
|
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் |
|
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் |
|
20 |
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ! |
படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே! |
|
திணையும் துறையும் அவை.
| |
நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது.
|