முகப்பு | தொடக்கம் |
பொத்தியார் |
217 |
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, |
|
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்; |
|
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் |
|
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, |
|
5 |
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக, |
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்; |
|
'வருவன்' என்ற கோனது பெருமையும், |
|
அது பழுது இன்றி வந்தவன் அறிவும், |
|
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே; |
|
10 |
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் |
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை |
|
அன்னோனை இழந்த இவ் உலகம் |
|
என் ஆவதுகொல்? அளியது தானே! |
|
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
| |
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.
|
220 |
பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த |
|
பெருங் களிறு இழந்த பைதல் பாகன் |
|
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை, |
|
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு, |
|
5 |
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த் |
தேர் வண் கிள்ளி போகிய |
|
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.
|
221 |
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே; |
|
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே; |
|
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே; |
|
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே; |
|
5 |
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; |
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; |
|
அனையன் என்னாது, அத் தக்கோனை, |
|
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று; |
|
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை |
|
10 |
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்! |
'நனந் தலை உலகம் அரந்தை தூங்க, |
|
கெடு இல் நல் இசை சூடி, |
|
நடுகல் ஆயினன் புரவலன்' எனவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் நடுகல் கண்டு அவர் பாடியது.
|
222 |
'அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி, |
|
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த |
|
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா' என, |
|
என் இவண் ஒழித்த அன்பிலாள! |
|
5 |
எண்ணாது இருக்குவை அல்லை; |
என் இடம் யாது? மற்று இசை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை, தன் மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று, பொத்தியார், 'எனக்கு இடம் தா' என்று சொற்றது.
|
223 |
பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி, |
|
தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி, |
|
நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும், |
|
இடம் கொடுத்து அளிப்ப, மன்ற உடம்போடு |
|
5 |
இன் உயிர் விரும்பும் கிழமைத் |
தொல் நட்புடையார் தம் உழைச் செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.
|