முகப்பு | தொடக்கம் |
பொன் முடியார் |
299 |
பருத்தி வேலிச் சீறூர் மன்னன் |
|
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி, |
|
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ |
|
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின், |
|
5 |
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, |
அணங்குடை முருகன் கோட்டத்துக் |
|
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே. |
|
திணை நொச்சி; துறை குதிரை மறம்.
| |
பொன்முடியார் பாடியது.
|
310 |
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், |
|
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு, |
|
உயவொடு வருந்தும் மன்னே! இனியே |
|
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான், |
|
5 |
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, |
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு |
|
மான் உளை அன்ன குடுமித் |
|
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பொன்முடியார் பாடியது.
|
312 |
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; |
|
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; |
|
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; |
|
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, |
|
5 |
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, |
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. |
|
திணை வாகை; துறை மூதில்முல்லை.
| |
பொன்முடியார் பாடியது.
|