முகப்பு | தொடக்கம் |
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
329 |
இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப் |
|
புடை நடு கல்லின் நாட் பலி ஊட்டி, |
|
நல் நீராட்டி, நெய்ந் நறைக் கொளீஇய, |
|
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும், |
|
5 |
அரு முனை இருக்கைத்துஆயினும், வரி மிடற்று |
அரவு உறை புற்றத்து அற்றே நாளும் |
|
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு |
|
அருகாது ஈயும் வண்மை, |
|
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.
|