மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்

350
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,
சிதைந்த இஞ்சி, கதுவாய் மூதூர்
யாங்கு ஆவதுகொல் தானே, தாங்காது?
படு மழை உருமின் இரங்கு முரசின்
5
கடு மான் வேந்தர் காலை வந்து, எம்
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமைகுவர்அல்லர் போர் உழந்து,
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண்,
10
தொடி பிறழ் முன்கை, இளையோள்
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே.

திணையும் துறையும் அவை.
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் பாடியது.