முகப்பு | தொடக்கம் |
மதுரைக் கணக்காயனார் |
330 |
வேந்துடைத் தானை முனை கெட நெரிதர, |
|
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி, |
|
தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு |
|
ஆழி அனையன்மாதோ என்றும் |
|
5 |
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப் |
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த் |
|
தொன்மை சுட்டிய வண்மையோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைக் கணக்காயனார் பாடியது.
|