முகப்பு | தொடக்கம் |
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் |
316 |
கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி, |
|
காட்டொடு மிடைந்த சீயா முன்றில், |
|
நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே. |
|
அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்; |
|
5 |
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் |
இரும் புடைப் பழ வாள் வைத்தனன்; இன்று இக் |
|
கருங் கோட்டுச் சீறியாழ் பணையம்; இது கொண்டு |
|
ஈவதிலாளன் என்னாது, நீயும், |
|
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய, |
|
10 |
கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க, |
சென்று வாய் சிவந்து மேல் வருக |
|
சிறு கண் யானை வேந்து விழுமுறவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.
|