முகப்பு | தொடக்கம் |
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் |
59 |
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின், |
|
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி! |
|
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்; |
|
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும் |
|
5 |
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் |
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு; |
|
திங்கள் அனையை, எம்மனோர்க்கே. |
|
திணை அது; துறை பூவை நிலை.
| |
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.
|