முகப்பு | தொடக்கம் |
மதுரைப் படை மங்கமன்னியார் |
351 |
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும், |
|
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும், |
|
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென, |
|
கடல் கண்டன்ன கண் அகன் தானை |
|
5 |
வென்று எறி முரசின் வேந்தர், என்றும், |
வண் கை எயினன் வாகை அன்ன |
|
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்; |
|
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப் |
|
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை |
|
10 |
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின், |
காமரு காஞ்சித் துஞ்சும் |
|
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.
|