முகப்பு | தொடக்கம் |
மதுரைப் பூதன் இளநாகனார் |
276 |
நறு விரை துறந்த நரை வெண் கூந்தல், |
|
இரங் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை, |
|
செம் முது பெண்டின் காதலம் சிறாஅன், |
|
மடப் பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த |
|
5 |
குடப் பால் சில் உறை போல, |
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே. |
|
திணை அது; துறை தானை நிலை.
| |
மதுரைப் பூதன் இளநாகனார் பாடியது.
|