முகப்பு | தொடக்கம் |
மதுரைப் பேராலவாயார் |
247 |
யானை தந்த முளி மர விறகின் |
|
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து, |
|
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி, |
|
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், |
|
5 |
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ, |
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி, |
|
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் |
|
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச் |
|
சிறு நனி தமியள் ஆயினும், |
|
10 |
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே! |
திணையும் துறையும் அவை.
| |
அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.
|
262 |
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; |
|
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்ப் |
|
புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்மின் |
|
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின் நின்று, |
|
5 |
நிரையொடு வரூஉம் என்னைக்கு |
உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே. |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு; தலைத்தோற்றமும் ஆம்.
| |
....................மதுரைப் பேராலவாயார் பாடியது.
|