மதுரை வேளாசான்

305
வயலைக் கொடியின் வாடிய மருங்குல்,
உயவல் ஊர்தி, பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்கு,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
5
ஏணியும் சீப்பும் மாற்றி,
மாண் வினை யானையும் மணி களைந்தனவே.

திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
மதுரை வேளாசான் பாடியது.