முகப்பு | தொடக்கம் |
மருதன் இளநாகனார் |
52 |
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ, |
|
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல், |
|
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து, |
|
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு, |
|
5 |
வட புல மன்னர் வாட, அடல் குறித்து, |
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி! |
|
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து |
|
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும் |
|
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி |
|
10 |
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் |
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே |
|
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் |
|
பலி கண் மாறிய பாழ்படு பொதியில், |
|
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த |
|
15 |
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக் |
கான வாரணம் ஈனும் |
|
காடு ஆகி விளியும் நாடு உடையோரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|
138 |
ஆனினம் கலித்த அதர் பல கடந்து, |
|
மானினம் கலித்த மலை பின் ஒழிய, |
|
மீனினம் கலித்த துறை பல நீந்தி, |
|
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ், |
|
5 |
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! |
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை, |
|
'மாறி வா' என மொழியலன் மாதோ; |
|
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன் |
|
கிளி மரீஇய வியன் புனத்து |
|
10 |
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின், |
நின்னை வருதல் அறிந்தனர் யாரே? |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|
139 |
சுவல் அழுந்தப் பல காய |
|
சில் ஓதிப் பல் இளைஞருமே, |
|
அடி வருந்த நெடிது ஏறிய |
|
கொடி மருங்குல் விறலியருமே, |
|
5 |
வாழ்தல் வேண்டிப் |
பொய் கூறேன்; மெய் கூறுவல்; |
|
ஓடாப் பூட்கை உரவோர் மருக! |
|
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந! |
|
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி, |
|
10 |
கனி பதம் பார்க்கும் காலை அன்றே; |
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச் |
|
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை, |
|
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு, ஒரு நாள், |
|
அருஞ் சமம் வருகுவதுஆயின், |
|
15 |
வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே. |
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனை அவர் பாடியது.
|