முகப்பு | தொடக்கம் |
மாங்குடி கிழார் |
24 |
நெல் அரியும் இருந் தொழுவர் |
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், |
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; |
|
திண் திமில் வன் பரதவர் |
|
5 |
வெப்பு உடைய மட்டு உண்டு, |
தண் குரவைச் சீர் தூங்குந்து; |
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை |
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் |
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; |
|
10 |
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் |
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் |
|
இரும் பனையின் குரும்பை நீரும், |
|
பூங் கரும்பின் தீம் சாறும், |
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத் |
|
15 |
தீம் நீரொடு உடன் விராஅய், |
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; |
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய |
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி |
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் |
|
20 |
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், |
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், |
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த |
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! |
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது |
|
25 |
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே |
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு |
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் |
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த |
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, |
|
30 |
இரவல் மாக்கள் ஈகை நுவல, |
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய |
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, |
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது |
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, |
|
35 |
மலர் தலை உலகத்துத் தோன்றி, |
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
26 |
நளி கடல் இருங் குட்டத்து |
|
வளி புடைத்த கலம் போல, |
|
களிறு சென்று களன் அகற்றவும், |
|
களன் அகற்றிய வியல் ஆங்கண் |
|
5 |
ஒளிறு இலைய எஃகு ஏந்தி, |
அரைசு பட அமர் உழக்கி, |
|
உரை செல முரசு வௌவி, |
|
முடித் தலை அடுப்பு ஆக, |
|
புனல் குருதி உலைக் கொளீஇ, |
|
10 |
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின், |
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய! |
|
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை, |
|
நான் மறை முதல்வர் சுற்றம் ஆக, |
|
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய |
|
15 |
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே! |
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு |
|
மாற்றார் என்னும் பெயர் பெற்று, |
|
ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
313 |
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் |
|
கைப் பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக் |
|
காணிய சென்ற இரவல் மாக்கள் |
|
களிறொடு நெடுந் தேர் வேண்டினும், கடவ; |
|
5 |
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட |
கழி முரி குன்றத்து அற்றே, |
|
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே. |
|
திணை அது; துறை வல்லாண் முல்லை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|
335 |
அடல் அருந் துப்பின்.................... |
|
...................குருந்தே முல்லை என்று |
|
இந் நான்கு அல்லது பூவும் இல்லை; |
|
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே, |
|
5 |
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு, |
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை; |
|
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று |
|
இந் நான்கு அல்லது குடியும் இல்லை; |
|
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி, |
|
10 |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென, |
கல்லே பரவின் அல்லது, |
|
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|
372 |
விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி, |
|
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த |
|
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி, |
|
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை, |
|
5 |
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின், |
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல், |
|
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின், |
|
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட |
|
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த, |
|
10 |
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் |
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க' எனப் |
|
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின் |
|
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை வாகை; துறை மறக்கள வேள்வி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
396 |
கீழ் நீரான் மீன் வழங்குந்து; |
|
மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து; |
|
கழி சுற்றிய விளை கழனி, |
|
அரிப் பறையான் புள் ஓப்புந்து; |
|
5 |
நெடுநீர் கூஉம் மணல் தண் கான் |
மென் பறையான் புள் இரியுந்து; |
|
நனைக் கள்ளின் மனைக் கோசர் |
|
தீம் தேறல் நறவு மகிழ்ந்து, |
|
தீம் குரவைக் கொளைத் தாங்குந்து; |
|
10 |
உள் இலோர்க்கு வலி ஆகுவன், |
கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன், |
|
கழுமிய வென் வேல் வேளே, |
|
வள நீர் வாட்டாற்று எழினியாதன்; |
|
கிணையேம், பெரும! |
|
15 |
கொழுந் தடிய சூடு என்கோ? |
வள நனையின் மட்டு என்கோ? |
|
குறு முயலின் நிணம் பெய்தந்த |
|
நறு நெய்ய சோறு என்கோ? |
|
திறந்து மறந்த கூட்டுமுதல் |
|
20 |
முகந்து கொள்ளும் உணவு என்கோ? |
அன்னவை பல பல |
|
.............................................ருநதய |
|
இரும் பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய |
|
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை; |
|
25 |
எம்மோர் ஆக்கக் கங்குண்டே; |
மாரி வானத்து மீன் நாப்பண், |
|
விரி கதிர வெண் திங்களின், |
|
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல் இசை! |
|
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும் |
|
30 |
நிரைசால் நன் கலன் நல்கி, |
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே! |
|
திணையும் துறையும் அவை.
| |
வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.
|