மாற்பித்தியார்

251
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில்,
பாவை அன்ன குறுந் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும்
கழைக் கண் நெடு வரை அருவி ஆடி,
5
கான யானை தந்த விறகின்
கடுந் தெறல் செந் தீ வேட்டு,
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!

திணை வாகை; துறை தாபத வாகை.
....................மாற்பித்தியார் பாடியது.

252
கறங்கு வெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள் இலைத் தாளி கொய்யுமோனே
இல் வழங்கு மட மயில் பிணிக்கும்
5
சொல் வலை வேட்டுவன் ஆயினன், முன்னே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.