முகப்பு | தொடக்கம் |
மாற்பித்தியார் |
251 |
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில், |
|
பாவை அன்ன குறுந் தொடி மகளிர் |
|
இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும் |
|
கழைக் கண் நெடு வரை அருவி ஆடி, |
|
5 |
கான யானை தந்த விறகின் |
கடுந் தெறல் செந் தீ வேட்டு, |
|
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே! |
|
திணை வாகை; துறை தாபத வாகை.
| |
....................மாற்பித்தியார் பாடியது.
|
252 |
கறங்கு வெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, |
|
தில்லை அன்ன புல்லென் சடையோடு, |
|
அள் இலைத் தாளி கொய்யுமோனே |
|
இல் வழங்கு மட மயில் பிணிக்கும் |
|
5 |
சொல் வலை வேட்டுவன் ஆயினன், முன்னே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|