முகப்பு | தொடக்கம் |
மாறோக்கத்து நப்பசலையார் |
37 |
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, |
|
வேக வெந் திறல், நாகம் புக்கென, |
|
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப் |
|
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு, |
|
5 |
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், |
சினம் கெழு தானை, செம்பியன் மருக! |
|
கராஅம் கலித்த குண்டு கண் அகழி, |
|
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, |
|
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் |
|
10 |
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, |
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர், |
|
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், |
|
'நல்ல' என்னாது, சிதைத்தல் |
|
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. |
|
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
39 |
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி |
|
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் |
|
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! |
|
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல் |
|
5 |
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் |
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், |
|
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று, |
|
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
|
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் |
|
10 |
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு |
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள், |
|
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ! |
|
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய |
|
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு |
|
15 |
இமயம் சூட்டிய ஏம விற்பொறி, |
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய, |
|
வாடா வஞ்சி வாட்டும் நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
126 |
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, |
|
பாணர் சென்னி பொலியத் தைஇ, |
|
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர் |
|
ஓடாப் பூட்கை உரவோன் மருக! |
|
5 |
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே |
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல் |
|
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின், |
|
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந! |
|
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய, |
|
10 |
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் |
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், |
|
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, |
|
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு |
|
சினம் மிகு தானை வானவன் குட கடல், |
|
15 |
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி, |
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை, |
|
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று |
|
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப, |
|
20 |
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, |
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் |
|
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் |
|
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
174 |
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென, |
|
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, |
|
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து |
|
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல் |
|
5 |
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு, |
அரசு இழந்திருந்த அல்லல் காலை, |
|
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது |
|
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி |
|
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர, |
|
10 |
பொய்யா நாவின் கபிலன் பாடிய, |
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச் |
|
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட |
|
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை, |
|
அரு வழி இருந்த பெரு விறல் வளவன் |
|
15 |
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை |
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந! |
|
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண், |
|
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன் |
|
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர், |
|
20 |
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், |
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் |
|
கவலை நெஞ்சத்து அவலம் தீர, |
|
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்! |
|
கல் கண் பொடிய, கானம் வெம்ப, |
|
25 |
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க, |
கோடை நீடிய பைது அறு காலை, |
|
இரு நிலம் நெளிய ஈண்டி, |
|
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
226 |
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், |
|
உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ; |
|
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, |
|
இரந்தன்றாகல் வேண்டும் பொலந் தார் |
|
5 |
மண்டு அமர் கடக்கும் தானைத் |
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
280 |
என்னை மார்பில் புண்ணும் வெய்ய; |
|
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்; |
|
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா; |
|
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; |
|
5 |
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; |
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் |
|
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா; |
|
துடிய! பாண! பாடு வல் விறலி! |
|
என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும் |
|
10 |
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும் |
மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வார, |
|
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல் |
|
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் |
|
கழி கல மகளிர் போல, |
|
15 |
வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே! |
திணை பொதுவியல்; துறை ஆனந்தப்பையுள்.
| |
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
383 |
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, |
|
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி, |
|
5 |
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, |
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி, |
|
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் |
|
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள, |
|
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் |
|
10 |
கழை படு சொலியின் இழை அணி வாரா, |
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண் |
|
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி, |
|
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, |
|
எற் பெயர்ந்த நோக்கி..................................... |
|
15 |
..............................................கல் கொண்டு, |
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி, |
|
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே; |
|
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, |
|
நரை முக ஊகமொடு, உகளும், சென................ |
|
20 |
.......................கன்று பல கெழீஇய |
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என |
|
ஒருவனை உடையேன்மன்னே, யானே; |
|
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? |
|
திணையும் துறையும் அவை.
| |
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
|