முகப்பு | தொடக்கம் |
முரஞ்சியூர் முடி நாகராயர் |
2 |
மண் திணிந்த நிலனும், |
|
நிலன் ஏந்திய விசும்பும், |
|
விசும்பு தைவரு வளியும், |
|
வளித் தலைஇய தீயும், |
|
5 |
தீ முரணிய நீரும், என்றாங்கு |
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல |
|
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், |
|
வலியும், தெறலும், அளியும், உடையோய்! |
|
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் |
|
10 |
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும், |
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந! |
|
வான வரம்பனை! நீயோ, பெரும! |
|
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ, |
|
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை |
|
15 |
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய, |
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்! |
|
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், |
|
நாஅல் வேத நெறி திரியினும், |
|
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி, |
|
20 |
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து, |
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை, |
|
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும் |
|
முத் தீ விளக்கின், துஞ்சும் |
|
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
| |
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.
|