முகப்பு | தொடக்கம் |
மோசி கீரனார் |
50 |
மாசு அற விசித்த வார்புறு வள்பின் |
|
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை |
|
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார், |
|
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி, |
|
5 |
குருதி வேட்கை உரு கெழு முரசம் |
மண்ணி வாரா அளவை, எண்ணெய் |
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை |
|
அறியாது ஏறிய என்னைத் தெறுவர, |
|
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை |
|
10 |
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்; |
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் |
|
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென |
|
வீசியோயே; வியலிடம் கமழ, |
|
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது |
|
15 |
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை |
விளங்கக் கேட்ட மாறுகொல் |
|
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.
|
154 |
திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும், |
|
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும் |
|
சில் நீர் வினவுவர், மாந்தர்; அது போல், |
|
அரசர் உழையராகவும், புரை தபு |
|
5 |
வள்ளியோர்ப் படர்குவர், புலவர்: அதனால், |
யானும், 'பெற்றது ஊதியம்; பேறு யாது?' என்னேன்; |
|
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே; |
|
'ஈ' என இரத்தலோ அரிதே; நீ அது |
|
நல்கினும், நல்காய் ஆயினும், வெல் போர் |
|
10 |
எறி படைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் |
தூ விரி கடுப்பத் துவன்றி மீமிசைத் |
|
தண் பல இழிதரும் அருவி நின் |
|
கொண் பெருங் கானம், பாடல் எனக்கு எளிதே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
கொண்கானங்கிழானை மோசிகீரனார் பாடியது.
|
155 |
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, |
|
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என, |
|
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின், |
|
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ |
|
5 |
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு, |
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் |
|
கொண் பெருங் கானத்துக் கிழவன் |
|
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
அவனை அவர் பாடியது.
|
156 |
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும் |
|
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்; |
|
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் |
|
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று |
|
5 |
நிறை அருந் தானை வேந்தரைத் |
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே. |
|
திணை அது; துறை இயன் மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
186 |
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; |
|
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்: |
|
அதனால், யான் உயிர் என்பது அறிகை |
|
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மோசிகீரனார் பாடியது.
|