மோசி சாத்தனார்

272
மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி!
போது விரி பல் மரனுள்ளும் சிறந்த
காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே!
கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த
5
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின்,
ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை
பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே.

திணையும் துறையும் அவை.
மோசி சாத்தனார் பாடியது.