முகப்பு | தொடக்கம் |
வட நெடுந்தத்தனார் |
179 |
'ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென, |
|
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை |
|
மலர்ப்போர் யார்?' என வினவலின், மலைந்தோர் |
|
விசி பிணி முரசமொடு மண் பல தந்த |
|
5 |
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன், |
படை வேண்டுவழி வாள் உதவியும், |
|
வினை வேண்டுவழி அறிவு உதவியும், |
|
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து |
|
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து, |
|
10 |
தோலா நல் இசை, நாலை கிழவன், |
பருந்து பசி தீர்க்கும் நற் போர்த் |
|
திருந்து வேல் நாகன் கூறினர், பலரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
நாலை கிழவன் நாகனை வடநெடுந் தத்தனார் பாடியது.
|