முகப்பு | தொடக்கம் |
வான்மீகியார் |
358 |
பருதி சூழ்ந்த இப் பயம் கெழு மா நிலம் |
|
ஒரு பகல் எழுவர் எய்தியற்றே; |
|
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு |
|
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின், |
|
5 |
கைவிட்டனரே காதலர்; அதனால் |
விட்டோரை விடாஅள், திருவே; |
|
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே. |
|
திணை அது; துறை மனையறம், துறவறம்.
| |
வான்மீகியார் பாடியது.
|