வான்மீகியார்

358
பருதி சூழ்ந்த இப் பயம் கெழு மா நிலம்
ஒரு பகல் எழுவர் எய்தியற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்,
5
கைவிட்டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே.

திணை அது; துறை மனையறம், துறவறம்.
வான்மீகியார் பாடியது.