முகப்பு | தொடக்கம் |
வெண்ணிக் குயத்தியார் |
66 |
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி, |
|
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! |
|
களி இயல் யானைக் கரிகால்வளவ! |
|
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற |
|
5 |
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே |
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை, |
|
மிகப் புகழ் உலகம் எய்தி, |
|
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே? |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.
|