முகப்பு | தொடக்கம் |
வெள்ளெருக்கிலையார் |
233 |
பொய்யாகியரோ! பொய்யாகியரோ! |
|
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் |
|
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய |
|
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ! |
|
5 |
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண், |
போர் அடு தானை, எவ்வி மார்பின் |
|
எஃகுறு விழுப்புண் பல' என |
|
வைகுறு விடியல், இயம்பிய குரலே. |
|
திணயும் துறையும் அவை.
| |
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
|
234 |
நோகோ யானே? தேய்கமா காலை! |
|
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி, |
|
தன் அமர் காதலி புல் மேல் வைத்த |
|
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல் |
|
5 |
உலகு புகத் திறந்த வாயில் |
பலரோடு உண்டல் மரீஇயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|