முகப்பு | தொடக்கம் |
வெள்ளைக்குடி நாகனார் |
35 |
நளி இரு முந்நீர் ஏணி ஆக, |
|
வளி இடை வழங்கா வானம் சூடிய |
|
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், |
|
முரசு முழங்கு தானை மூவருள்ளும், |
|
5 |
அரசு எனப்படுவது நினதே, பெரும! |
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், |
|
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், |
|
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, |
|
தோடு கொள் வேலின் தோற்றம் போல, |
|
10 |
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் |
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க |
|
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! |
|
நினவ கூறுவல்; எனவ கேண்மதி! |
|
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து |
|
15 |
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு |
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; |
|
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ |
|
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு, |
|
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை |
|
20 |
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய |
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! |
|
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, |
|
25 |
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை |
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; |
|
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், |
|
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், |
|
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; |
|
30 |
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும் |
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, |
|
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, |
|
குடி புறந்தருகுவை ஆயின், நின் |
|
அடி புறந்தருகுவர், அடங்காதோரே. |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
|