வெள்ளைமாளர்

296
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென்றவ்வே;
வேந்து உடன்று எறிவான்கொல்லோ
5
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே?

திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
வெள்ளைமாளர் பாடியது.