முகப்பு | தொடக்கம் |
வெறி பாடிய காமக்கண்ணியார் |
271 |
நீர் அறவு அறியா நிலமுதல் கலந்த |
|
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை, |
|
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல், |
|
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே, |
|
5 |
வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து, |
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து, |
|
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் |
|
மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே! |
|
திணை நொச்சி; துறை செருவிடை வீழ்தல்.
| |
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
|
302 |
வெடி வேய் கொள்வது போல ஓடி, |
|
தாவுபு உகளும், மாவே; பூவே, |
|
விளங்குஇழை மகளிர் கூந்தல் கொண்ட; |
|
நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய |
|
5 |
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க் |
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய, |
|
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; |
|
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, |
|
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், |
|
10 |
விண் இவர் விசும்பின் மீனும், |
தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே. |
|
திணை அது; துறை குதிரை மறம்.
| |
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
|