முகப்பு | தொடக்கம் |
244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339, 340, 355,361 |
244 |
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா; |
|
விறலியர் முன்கையும் தொடியின் பொலியா;
| |
இரவல் மாக்களும்... ... ... ... ... ... ... ... ... ...
|
256 |
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! |
|
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய |
|
சிறு வெண் பல்லி போல, தன்னொடு |
|
சுரம் பல வந்த எமக்கும் அருளி, |
|
5 |
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி |
அகலிதாக வனைமோ |
|
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
............................................
|
257 |
செருப்பு இடைச் சிறு பரல் அன்னன்; கணைக் கால், |
|
அவ் வயிற்று, அகன்ற மார்பின், பைங் கண், |
|
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய், |
|
செவி இறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு, |
|
5 |
யார்கொலோ, அளியன்தானே? தேரின் |
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக் |
|
காடு கைக் கொண்டன்றும், இலனே; காலை, |
|
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி, |
|
கையின் சுட்டிப் பையென எண்ணி, |
|
10 |
சிலையின் மாற்றியோனே; அவைதாம் |
மிகப் பலவாயினும், என் ஆம் எனைத்தும் |
|
வெண் கோள் தோன்றாக் குழிசியொடு, |
|
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே? |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
............................................
|
263 |
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் |
|
இரும் பறை இரவல! சேறிஆயின், |
|
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது, |
|
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே |
|
5 |
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து, |
கல்லா இளையர் நீங்க நீங்கான், |
|
வில் உமிழ் கடுங் கணை மூழ்க, |
|
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே. |
|
திணை கரந்தை; துறை கையறுநிலை.
| |
..............................................
|
297 |
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை |
|
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் |
|
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை, |
|
கன்றுடை மரை ஆத் துஞ்சும் சீறூர்க் |
|
5 |
கோள் இவண் வேண்டேம், புரவே; நார் அரி |
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி, |
|
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும் |
|
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந் நுதி |
|
நெடு வேல் பாய்ந்த மார்பின், |
|
10 |
மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே. |
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
.............................................
|
307 |
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
|
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; |
|
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; |
|
வேனல் வரி அணில் வாலத்து அன்ன, |
|
5 |
கான ஊகின் கழன்று உகு முது வீ |
அரியல் வான் குழல் சுரியல் தங்க, |
|
நீரும் புல்லும் ஈயாது, உமணர் |
|
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த |
|
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர் |
|
10 |
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு, |
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து, |
|
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என, |
|
பண் கொளற்கு அருமை நோக்கி, |
|
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே. |
|
திணை தும்பை; துறை களிற்றுடனிலை.
| |
.............................................
|
323 |
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் |
|
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும் |
|
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு |
|
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, |
|
5 |
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் |
கறையடி யானைக்கு அல்லது |
|
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே. |
|
............................................
| |
................டார் கிழார் பாடியது.
|
327 |
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற |
|
சில் விளை வரகின் புல்லென் குப்பை, |
|
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் |
|
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின், |
|
5 |
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச் |
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி, |
|
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை |
|
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
............................................
|
328 |
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த |
|
புன் புலச் சீறூர், நெல் விளையாதே; |
|
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் |
|
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன; |
|
5 |
................. டு அமைந்தனனே; |
அன்னன் ஆயினும், பாண! நன்றும் |
|
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட.... |
|
களவுப் புளி அன்ன விளை.... |
|
..............வாடு ஊன் கொழுங் குறை |
|
10 |
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு, |
துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு |
|
உண்டு, இனிது இருந்த பின் |
|
... ... ... ... .... ... தருகுவன் மாதோ |
|
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை |
|
15 |
முயல் வந்து கறிக்கும் முன்றில், |
சீறூர் மன்னனைப் பாடினை செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பங்கு ............................. பாடியது.
|
333 |
நீருள் பட்ட மாரிப் பேர் உறை |
|
மொக்குள் அன்ன பொகுட்டு விழிக் கண்ண, |
|
கரும் பிடர்த் தலைய, பெருஞ் செவிக் குறு முயல் |
|
உள் ஊர்க் குறும் புதல் துள்ளுவன உகளும் |
|
5 |
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், |
'உண்க' என உணரா உயவிற்று ஆயினும், |
|
தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்; |
|
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி, |
|
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் |
|
10 |
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென, |
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின், |
|
குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து, |
|
சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர் |
|
வேட்டக் குடிதொறும் கூட்டு |
|
15 |
.............................................. உடும்பு செய் |
பாணி நெடுந் தேர் வல்லரோடு ஊரா, |
|
வம்பு அணி யானை வேந்து தலைவரினும், |
|
உண்பது மன்னும் அதுவே; |
|
பரிசில் மன்னும், குருசில் கொண்டதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
............................................
|
339 |
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு |
|
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர் |
|
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் |
|
5 |
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; |
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் |
|
கடல் ஆடிக் கயம் பாய்ந்து, |
|
கழி நெய்தல் பூக்குறூஉந்து; |
|
பைந் தழை துயல்வரும் செறு விறற.............. |
|
10 |
..............................................லத்தி |
வளர வேண்டும், அவளே, என்றும் |
|
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, |
|
முறம் செவி யானை வேந்தர் |
|
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
............................................
|
340 |
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக் |
|
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள், |
|
மா மகள் |
|
....................... ல் என வினவுதி, கேள், நீ: |
|
5 |
எடுப்பவெ...,............................................ |
..........................மைந்தர் தந்தை |
|
இரும் பனை அன்ன பெருங் கை யானை |
|
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் |
|
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே. |
|
திணையும் துறையும் அவை.
அ............................... பாடியது. |
3555 |
மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும், |
|
நீஇர் இன்மையின், கன்று மேய்ந்து உகளும்; |
|
ஊரது நிலைமையும் இதுவே: |
|
............................................ |
|
..............................................
| |
..............................................
|
361 |
கார் எதிர் உருமின் உரறி, கல்லென, |
|
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! |
|
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல |
|
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, |
|
5 |
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத் |
தாயின் நன்று பலர்க்கு ஈத்து, |
|
தெருள் நடை மா களிறொடு தன் |
|
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், |
|
உருள் நடை ........................ான்றதன் |
|
10 |
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், |
புரி மாலையர் பாடினிக்குப் |
|
பொலந் தாமரைப் பூம் பாணரொடு |
|
கலந்து அளைஇய நீள் இருக்கையால் |
|
பொறையொ............ மான் நோக்கின், |
|
15 |
வில் என விலங்கிய புருவத்து, வல்லென |
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர் |
|
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென |
|
............................................பொலங்கலத்து ஏந்தி, |
|
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன், |
|
20 |
நில்லா உலகத்து............... மை நீ |
சொல்ல வேண்டா................. முந்தறிந்த |
|
.............................................
| |
............................................னார் பாடியது.
|