முகப்பு | தொடக்கம் |
அகுதை |
233 |
பொய்யாகியரோ! பொய்யாகியரோ! |
|
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் |
|
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய |
|
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ! |
|
5 |
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண், |
போர் அடு தானை, எவ்வி மார்பின் |
|
எஃகுறு விழுப்புண் பல' என |
|
வைகுறு விடியல், இயம்பிய குரலே. |
|
திணயும் துறையும் அவை.
| |
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
|
347 |
உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில |
|
நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த |
|
ஒளிறு ஒள் வாடக் குழைந்த பைந் தும்பை, |
|
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின், |
|
5 |
மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை, |
குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன |
|
குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப, |
|
................................................... |
|
என் ஆவதுகொல் தானே?..................................... |
|
10 |
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர் |
வினை நவில் யானை பிணிப்ப, |
|
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|