முகப்பு | தொடக்கம் |
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி |
96 |
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின், |
|
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு |
|
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே, |
|
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, |
|
5 |
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, |
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது, |
|
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் |
|
கைமான் கொள்ளுமோ?' என, |
|
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
102 |
'எருதே இளைய; நுகம் உணராவே; |
|
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே; |
|
அவல் இழியினும், மிசை ஏறினும், |
|
அவணது அறியுநர் யார்?' என, உமணர் |
|
5 |
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன, |
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள் |
|
நாள் நிறை மதியத்து அனையை; இருள் |
|
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
392 |
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான், |
|
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான் |
|
பசலை நிலவின் பனி படு விடியல், |
|
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை |
|
5 |
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ, |
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து, |
|
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து |
|
அணங்குடை மரபின் இருங் களந்தோறும், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
10 |
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் |
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச் |
|
சென்று யான் நின்றனெனாக, அன்றே, |
|
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி |
|
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை |
|
15 |
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத் |
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் |
|
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ, |
|
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை |
|
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து |
|
20 |
அரும் பெறல் அமிழ்தம் அன்ன |
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.
|