முகப்பு | தொடக்கம் |
ஆந்தை |
67 |
அன்னச் சேவல்! அன்னச் சேவல்! |
|
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் |
|
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, |
|
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் |
|
5 |
மையல் மாலை, யாம் கையறுபு இனைய, |
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, |
|
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது |
|
சோழ நல் நாட்டுப் படினே, கோழி |
|
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, |
|
10 |
வாயில் விடாது கோயில் புக்கு, எம் |
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் |
|
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் |
|
இன்புறு பேடை அணிய, தன் |
|
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|
71 |
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து, |
|
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து, |
|
என்னொடு பொருதும் என்ப; அவரை |
|
ஆர் அமர் அலறத் தாக்கி, தேரொடு |
|
5 |
அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த |
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக; |
|
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து, |
|
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து |
|
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ் |
|
10 |
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் |
பொய்யா யாணர் மையல் கோமான் |
|
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால் |
|
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும், |
|
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும், |
|
15 |
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த |
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ, |
|
மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த |
|
தென் புலம் காவலின் ஒரீஇ, பிறர் |
|
வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே! |
|
திணை காஞ்சி; துறை வஞ்சினக் காஞ்சி.
| |
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாட்டு.
|